மக்களை காவலர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும்: ஏ.கே.விஸ்வநாதன்

 

மக்களை காவலர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும்: ஏ.கே.விஸ்வநாதன்

பொதுமக்களை காவலர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

சென்னை: பொதுமக்களை காவலர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காவல்துறையின் இமேஜை முடிவு செய்வது, நம்மிடம் வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது தான். நான் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, மக்களை நீங்கள் அப்படி நடத்துங்கள்.  காவல் துறையினர் பொதுமக்கள் மத்தியில் பயத்தை உருவாக்க கூடாது.

காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்களை காவலர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும். சேவை செய்யும் பணி என உணர்ந்து புகார் கொடுக்க வருவோரை கனிவோடு அணுக வேண்டும். காவலர்கள் சிறப்பாக செயல்பட்டதால்தான் தமிழக முதல்வர் டெல்லியில் விருது பெற்றுள்ளார் என்றார்.