மக்களுக்கு எந்த பயனும் இல்லாத நான்கு நாள் அறிவிப்புகள்! – ப.சிதம்பரம் வேதனை

 

மக்களுக்கு எந்த பயனும் இல்லாத நான்கு நாள் அறிவிப்புகள்! – ப.சிதம்பரம் வேதனை

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்கு நாட்கள் அறிவித்த அறிவிப்புகளால் தானியத்துக்கு ரூ.3500 கோடி தவிர்த்து மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்கு நாட்கள் அறிவித்த அறிவிப்புகளால் தானியத்துக்கு ரூ.3500 கோடி தவிர்த்து மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

nirmala-sitharaman-78

ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“ஏழைக் குடும்பங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாள் கூலி தொழிலாளர்கள், சுய வேலை செய்பவர்கள், வேலையிழந்த தொழிலாளர்கள், கீழ்த்தட்டில் உள்ள நடுத்தர மக்கள் ஆகியோருக்கு எந்தப் பயனும் இல்லாத நிதியமைச்சரின் அறிவிப்புகளை நான்கு நாட்களாகக் கேட்டோம்.

மேற்குறிப்பிட்டவர்களுக்கு நிதியமைச்சரின் முதல் தவணை அறிவிப்பில் எதுவுமில்லை. இரண்டாவது தவணை அறிவிப்பில் புலம் பெயர்ந்து திரும்பியவர்களுக்குத் தலா 10 கிலோ தானியத்திற்கு ரூ 3500 கோடி மட்டுமே. மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் பூஜ்யம். வாழ்க இந்திய ஜனநாயகம்!” என்று கூறியுள்ளார்.