மக்களுக்கு எதிராகச் செல்லும் இந்த ஜனநாயகத்தை ஒழிக்காமல் நான் ஓய மாட்டேன்.. குடியுரிமைக்கு எதிராகப் பாயும் கமல்ஹாசன் !
டெல்லியிலும் அசாமிலும் நடக்கிற அரச பயங்கரவாதம் மாணவர்கள் மேல் விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜனநாயகம் வழங்கிய கருத்துரை கருத்துரிமை மேல் விழும் அடி.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாடே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, நாட்டில் ஜனநாயகம் என்ற பேரில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தியாவின் முதுகெலும்பு என சொல்லப்படும் கிராமங்களில் விவசாயி தற்கொலை செய்து கொண்டு செத்துக் கொண்டிருக்கும் பொழுது அதைத் தடுக்க வழி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசாங்கத்தின் சூழ்ச்சி. சரிபாதி பெண்கள் வயது பாரபட்சமின்றி உயிர் பயத்தில் வாழும் நேரத்தில் சட்டத்தின் மூலம் அதை தெரிவிக்காமல் வாக்கு வங்கிக்காக சட்டப்பிழைகளை செய்வது அரசு மக்களுக்கு எதிரான தொடுக்கும் போர் வியூகம். எதிர்கால தூண்களான மாணவர்கள் அரசியல் விடுதலைக்குக் கேள்வி கேட்கும் போது கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு எறிவதும் காக்கிகளைக் கொண்டு அடிப்பதும் தான் அரசாங்கத்தின் பதில். பெட்ரோலின் விலை 70 தொட்டபோது குஜராத்தின் கோடிகள் நஷ்டம் ஆகும் எனக்கு உதித்தவர் ஆளும் போது நாட்டில் பெட்ரோல் விலை 75 ரூபாய்.
பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. விலைவாசி விண்ணை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என அனைவரும் கலக்கத்தில் இருக்கும் வேளையில் குடி உரிமைச் சட்டத்திருத்தத்திற்கான அவசரம் என்ன என்கிற கேள்வி நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியே. பாகிஸ்தான் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை ஏன் இலங்கை இந்தியன் வழங்கப்படவில்லை. ஆண்டாண்டு காலமாக தோள் கொடுக்கும் என்று நம்பும் இலங்கை தமிழர்களுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?.
முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தத்தின் தப்பி தமிழகம் தஞ்சம் அடைந்தவர்கள் நிலை இனி என்ன?. டெல்லியிலும் அசாமிலும் நடக்கிற அரச பயங்கரவாதம் மாணவர்கள் மேல் விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜனநாயகம் வழங்கிய கருத்துரை கருத்துரிமை மேல் விழும் அடி. கேள்வி கேட்க பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தை எதிர்கால தலைமுறையினரிடம் ஏற்படுத்த விழும் அடி. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான பதில் இல்லாததால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் விழும் அடி. மாணவனுக்கு பதில் இல்லை. விவசாயிக்கு வாழ வழியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பொருளாதாரம் சரியில்லை. குற்றங்கள் கட்டுக்குள் இல்லை. வேலை வாய்ப்பு இல்லவே இல்லை என எதையும் சாதிக்கும் இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை.
Makkal Needhi Maiam Party President Mr @ikamalhaasan Press release regarding The Citizenship Amendment Act, 2019.#MNMForPeople#MNMagainstCAB#MakkalNeedhiMaiam pic.twitter.com/iIynsIE2FZ
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 17, 2019
இந்த அரசு செய்யும் வேலைகளை எல்லாம் உலக வரலாறும் முன்பே கண்டிருக்கிறது. இனத்தின் பெயரால் நாட்டைப் பிரித்து புதிய நாடு பிறந்துவிடும் என ஆசை வார்த்தை பேசி சட்டத் திருத்தங்களை தனக்கு சாதகமாக்கி செய்தவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதற்கான பதில் வரலாற்றில் இருண்ட பக்கங்களில் உள்ளது. அந்த வரலாற்றை முடிவு எப்போதும் மக்கள் கையில்தான் இருக்கிறது. அதிகாரம் மக்கள் கையில் இருக்கும் வரையில் ஜனநாயகம் மக்களுக்கு எதிராக செல்லும். இந்த தனி நாயகத்தை ஒழிக்கும் வகையில் நான் ஓயமாட்டேன் நாம் யாருமே உயர் கூடாது நம் படையோடு மோத வழியில்லை என்று தெரிந்து கொண்டு நம் கால்களுக்கிடையில் பாம்புகளை விடுகிறார்கள். பாம்பை கண்டு பயப்படும் படி அல்ல எங்கள் இளைஞர் கூட்டம் என்பதை உரக்கச் சொல்லவேண்டிய நேரம் இது. சர்வாதிகாரத்துக்கு எதிராக சுதந்திர காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கி தான் எழவேண்டும். தாய்நாட்டின் இப்பிணிகளை. தேச விரோத சக்திகளின் தொடக்கம் இது” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.