மக்களின் கருத்தை ராகுல் காந்தி பிரதிபலித்துள்ளார் – கஸ்தூரி சொல்கிறார்!

 

மக்களின் கருத்தை ராகுல் காந்தி பிரதிபலித்துள்ளார் – கஸ்தூரி சொல்கிறார்!

பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது பற்றி மக்களின் கருத்தைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதிபலித்துள்ளார் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் நடந்தது. இதில், நடிகை கஸ்தூரி கலந்துகொண்டார்.

பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது பற்றி மக்களின் கருத்தைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதிபலித்துள்ளார் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

kasthuri

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் நடந்தது. இதில், நடிகை கஸ்தூரி கலந்துகொண்டார். கஸ்தூரி பங்கேற்கிறார் என்று தெரிந்து, அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் அவரிடம் பேட்டி கேட்டனர். அப்போது அவர் கூறியது…
“இந்து மதம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்தும் செயல் நடந்து வருகிறது. பிரிவினைவாதம் பற்றி பேசும், செயல்படும் கூட்டம் இந்தியாவில் இருக்கிறது. 
பாலியல் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கொடூர சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது தொடர்பான மக்களின் கருத்தைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதிபலித்துள்ளார் என்று நினைக்கிறேன். அவருடைய கருத்தில் தவற இல்லை.

rahul gandhi

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது. இதில் யார் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்று கேட்கின்றீர்கள். முதலில் கர்ப்பமாகட்டும், பிறகு குழந்தைக்கு பெயர் வைப்பது பற்றி பேசலாம். தேர்தல் நடைபெறுமா என்று தெரியாமலே உள்ளாட்சித் தேர்தல் கலாட்டாக்கள் நடந்து வருகின்றன. அதேபோல், ரஜினி முதலில் கட்சி ஆரம்பித்தால்தான் யாருடன் கூட்டணி சேர்வார் என்பது எல்லாம் தெரியும்” என்றார்.