மக்களவை தேர்தல்: ம.தி.மு.க வேட்பாளராக கணேசமூர்த்தி போட்டி; அதிருப்தியில் ம.தி.மு.க.வினர்?!

 

மக்களவை தேர்தல்: ம.தி.மு.க வேட்பாளராக கணேசமூர்த்தி போட்டி; அதிருப்தியில் ம.தி.மு.க.வினர்?!

ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

சென்னை: ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடும் நிறைவடைந்தது  தி.மு.க தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை தி.மு.க நேற்று அறிவித்தது. 

அதன்படி வைகோ-வின் ம.தி.மு.க ஈரோடு தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 

மதிமுக வேட்பாளர் 

இந்நிலையில் மதிமுக பொருளாளரான அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என வைகோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் மார்ச் 19-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுகவினர்  அதிருப்தி

தி.மு.க கூட்டணியில், மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வைகோ களம்  காணுவார் என்று ம.தி.மு.கவினர் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அவர் போட்டியிடாதது  ம.தி.மு.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ம.தி.மு.க உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது.