மகாராஷ்டிராவில் 7ம் வகுப்பு மாணவியை ஆபாச படம் பார்க்க கட்டாயப்படுத்தி சீரழித்த ஆசிரியர்கள்….

 

மகாராஷ்டிராவில் 7ம் வகுப்பு மாணவியை ஆபாச படம் பார்க்க கட்டாயப்படுத்தி சீரழித்த ஆசிரியர்கள்….

மகாராஷ்டிராவில் 7ம் வகுப்பு மாணவியை ஆபாச படம் பார்க்க கட்டாயபடுத்தியதுடன், மாணவியை அறையில் பூட்டி 2 ஆசிரியர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் மராத்வாடா பகுதியில் நந்தீத் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள  ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவியை, அந்த பள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள் ஆபாச படம் பார்க்க கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் அந்த மாணவியை ஒரு அறையில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பள்ளி மாணவி

இந்த சம்பவம் 7 மாதங்களுக்கு முன் நடந்தது. ஆனால் தற்போதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் நடந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது அதனை போலீசார் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். ஆனால் விஷயம் பெரிதாவதை உணர்ந்த போலீசார் கடந்த 18ம் தேதி மாணவியின் பெற்றோர் கொடுத்த புகார் அடிப்படையில், 5 பேர் மீது இந்திய தண்டனை சட்டம், போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 ஆசிரியர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை கொண்டு நடவடிக்கை எடுத்தாலும், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இன்னும் முடிவுரை எழுத முடியவில்லை.