மகாராஷ்டிராவில் பாஜக அரியணை ஏறியது ராஜதந்திரமல்ல, பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம் – கே.எஸ்.அழகிரி
Nov 23, 2019, 19:32 IST1574517766000
மகாராஷ்டிராவில் பாஜக அரியணை ஏறியது ராஜதந்திரமல்ல, பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக அரியணை ஏறியது ராஜதந்திரமல்ல, பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பொருளாதார சீரழிவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க அரியணை ஏறியது ராஜ தந்திரம் அல்ல. பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம்” என தெரிவித்தார்.