மகாநடி படம் வெற்றியடைந்தது கீர்த்தி சுரேஷ் திறமையால் அல்ல: சர்ச்சை பதிவு வெளியிட்டு ரசிகர்களிடம் சிக்கிய ஸ்ரீ ரெட்டி!

 

மகாநடி படம் வெற்றியடைந்தது கீர்த்தி சுரேஷ் திறமையால் அல்ல: சர்ச்சை பதிவு வெளியிட்டு ரசிகர்களிடம் சிக்கிய ஸ்ரீ ரெட்டி!

நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகர்கள்,தயாரிப்பாளர்களை வம்புக்கு இழுக்காமல் இந்த முறை புதிதாக நடிகை கீர்த்தி சுரேஷை சிந்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகர்கள்,தயாரிப்பாளர்களை வம்புக்கு இழுக்காமல் இந்த முறை புதிதாக நடிகை கீர்த்தி சுரேஷை சிந்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப்  படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது இவர் கூறிய புகாரை ஏற்காததால் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் நேற்று விஷால் குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாடுகளை முன் வைத்துப் சலசலப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் இவர் எப்போதும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை மற்றுமே வம்புக்கு இழுத்துள்ளார். தற்போது அதற்கு மாறாக நடிகைகளையும் சீண்ட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் அந்த லிஸ்டில் முதல் ஆளாக நடிகை கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்துள்ளார்.  

இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கீர்த்தி சுரேஷை விமர்சனம் செய்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் உட்பட யாராலும் கீர்த்தி சுரேஷை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. 
 

என்னிடம் வந்து பல பேர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையைக் குறைத்த பிறகு நோயாளி போல் உள்ளார். அவர் நடித்த மகாநடி படம் இயக்குநரால் மட்டுமே சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல. தற்போது சாய் பல்லவி மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறார்’ என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதை பதிவை பார்த்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் அவரை வசைபாடி வருகின்றனர்.