மகள் பாசத்தால் அழுத சாண்டியை பார்த்து முன்னாள் மனைவி கண்ணீர்?

 

மகள் பாசத்தால் அழுத சாண்டியை பார்த்து முன்னாள் மனைவி கண்ணீர்?

சாண்டி கண்ணீர் விடுவதைப் பார்த்துத் தாங்க முடியாமல் அவரது மனைவியும் கண்ணீர் விடுத்துள்ளார். 

சென்னை: சாண்டி கண்ணீர் விடுவதைப் பார்த்துத் தாங்க முடியாமல் அவரது மனைவியும் கண்ணீர் விடுத்துள்ளார். 

பிக் பாஸ் 3 சீசன்னில் எப்போதும் சந்தோஷமாக இருந்து கொண்டு மற்றவரையும் சந்தோஷ படுத்துவார் படுத்துபவர் சாண்டி மாஸ்டர். எப்போதும் தனது நகைச்சுவை தன்மை மூலம் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் மகிழ்விக்கும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று சாண்டியின் பிறந்த நாள் பிக்பாஸ் வீட்டில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சாண்டிக்கு அவரது மகள் படம் போட்ட தலையணை கொடுக்கப்பட்டதோடு, அங்குள்ள டிவியில் சாண்டி குழந்தையின் வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. 

sandy

இதனைப் பார்த்து சாண்டி அன்பின் மிகுதியால், பிரிந்த குழந்தையை நினைத்துக் கதறி அழுகிறார். கூடவே வீட்டில் உள்ள அனைவரையும் வருத்தம் அடைந்து கண்ணீர் சிந்துகின்றனர். அந்த காட்சி மிகவும் சென்சிடிவாக இருந்ததால் பார்த்து கொண்டு இருந்த ரசிகர்களையும் அழ வைத்துவிட்டது. 

இந்த நிலையில் சாண்டியின் மகள் பாசத்தை தொலைக்காட்சியில் பார்த்த அவரது முன்னாள் மனைவியும் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான காஜல் பசுபதி ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் சாண்டி அழும் காட்சியை பதிவு செய்து கண்ணீர் வடிப்பது போன்ற இமோஜியையும் பதிவு செய்துள்ளார்.