மகள் திருமணத்திற்காக பரோலில் வருகிறார் நளினி

 

மகள் திருமணத்திற்காக பரோலில் வருகிறார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி வழக்கு தொடர்ந்தார்

சென்னை: நளினி மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக  ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதன்படி இன்று மதியம் நளினி நீதிமன்றத்தில் ஆஜராகி  வாதாடினார். 

hc

அப்போது பேசிய அவர், நானும் என் கணவரும் 28 ஆண்டுகளாகச்  சிறையில் உள்ளோம். என் குழந்தையும் சிறையில் பிறந்தது. அவளை நான் வளர்க்கவில்லை. என் மகள் திருமணத்திற்கு  ஆறுமாதம் பரோல் வழங்கவேண்டும். இதுவரை மூன்றுமுறை பரோல் வந்துள்ளேன். நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கடைப்பிடித்திருக்கிறேன். அப்போது நாளொன்றுக்கு 16,300 ரூபாய் செலவு செய்தேன். தற்போது தன்னிடம் வசதி இல்லாததால் அதை அரசே ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். 

nalini

இதையடுத்து வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் நடராஜன், 6 மாதம் பரோல் வழங்க முடியாது என வாதிட இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.