மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை.. போக்சோவில் கைது!

 

மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை.. போக்சோவில் கைது!

இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமை செய்தவர்கள் 1000 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீப காலமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணமான ஆபாசப் படங்களின் தளங்களை முடக்குவதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் சிறார்களின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றும் நபர்களையும் அதிரடியாகக் கைது செய்து வருகிறது.

ttn

இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமை செய்தவர்கள் 1000 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், குழந்தைகள் மீதான வன்கொடுமை தொடர்கதையாகவே உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் அருகே தந்தையே பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் வசித்து வருபவர்  மாரிமுத்து. இவருக்கு 5 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று இவரது மனைவி வேலைக்குச் சென்ற சமயம் பார்த்து அவரது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தாயாரிடம் குழந்தைகள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தாய் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த கீழக்கரை காவல்துறையினர், மாரிமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.