மகளை வைத்து செக்ஸ் ஆசை… கோடிகளில் மோசடி செய்த பெற்றோர்!

 

மகளை வைத்து செக்ஸ் ஆசை… கோடிகளில் மோசடி செய்த பெற்றோர்!

தமிழகத்தில், காதல் ஆசைக் காட்டி ஆண்கள் கல்லூரி மாணவிகளை தொடர்ந்து ஏமாற்றி பணம் பறித்த கதைகள் எல்லாம் நிறையவே வந்துவிட்டது. பொள்ளாச்சி, சேலம் என்று தொடர்ச்சியாக இப்படி ஏமாற்ற கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை ஆயிரங்களைத் தாண்டும். ஆனால், பெற்ற மகளையே பணயப் பொருளாக வைத்து செக்ஸ் ஆசைக் காட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியர்.

தமிழகத்தில், காதல் ஆசைக் காட்டி ஆண்கள் கல்லூரி மாணவிகளை தொடர்ந்து ஏமாற்றி பணம் பறித்த கதைகள் எல்லாம் நிறையவே வந்துவிட்டது. பொள்ளாச்சி, சேலம் என்று தொடர்ச்சியாக இப்படி ஏமாற்ற கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை ஆயிரங்களைத் தாண்டும். ஆனால், பெற்ற மகளையே பணயப் பொருளாக வைத்து செக்ஸ் ஆசைக் காட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியர். இவர்களது மிரட்டலுக்கு பயந்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்த மகனின் பெற்றோர் போலீசாரிடம் தைரியமாக புகார் அளித்ததைத் தொடர்ந்து பெற்றோரும், மகளும் சிக்கியிருக்கிறார்கள்.

parents

பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியர் லீனா கவிதா – பிரமோத் குமார். இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகள் உள்ளார். எல்லா செக்ஸ் புகார்களுக்கும் பின்னால் சமூக வலைத்தளங்கள் இருப்பதைப் போலவே இவரது மகளும் ஆன்லைன் மூலமாக பெங்களூருவில் இருக்கும் இளம் மருத்துவர் ஒருவரிடம் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இருவரும் நட்பாக நெருங்கி பழகி வந்துள்ளனர். பின், இருவரும் தனியே ஒரு முறை விடுதிக்குச் சென்றிருக்கிறார்கள். விடுதிக்குச் செல்லும் போது, பெற்றோர்களுக்கு தகவலைச் சொல்லியிருக்கிறாள் மகள். பின்னாலேயே வந்த பெற்றோர், விடுதியில் வைத்து மகளையும், மருத்துவரையும் பிடித்தனர். பின்னர் அந்த மருத்துவரின் பெற்றோர் முகவரியையும், தொலைப்பேசி எண்களையும் வாங்கிக் கொண்டு,  தங்கள் மகளை அங்கு இருந்து அழைத்து சென்றனர். 

arrest

அதன் பிறகு தான் விஷயத்தின் விபரீதத்தை உணர ஆரம்பித்தது மருத்துவரின் குடும்பம். சில நாட்கள் எதுவுமே நடைபெறாததைப் போல இருந்த மகளின் பெற்றோர், அதன் பிறகு மருத்துவரின் தாயாருக்கு போன் செய்து, என் மகளும், உங்கள் மகனும் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோ உள்ளது. ஒரு  கோடி ரூபாய் கொடுத்தால் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என மிரட்டியிருக்கிறார்கள். பணம் தராவிட்டால், வீடியோவை வெளியிட்டு, போலீசிலும் புகார் கொடுப்போம் என்கிற மிரட்டலுக்கு பயந்து மகனின் தாயார் நேரில் சந்தித்து ரூ.20 லட்சத்திற்கு காசோலை கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் மிரட்டவே ரூ.20 லட்சத்தை பணம் பரிமாற்றம் செய்துள்ளார். ருசி பார்த்த பூனையைப் போல் சும்மாயிருக்காமல் மீண்டும் மிரட்டி பணம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து ஐந்து மாதங்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் பணம் இல்லாததால், துணிந்து போலீசாரிடம்  புகார் கொடுத்துள்ளார் மகனின் தாயார். இப்போது லீனாவும், அவரது கணவரும் பெங்களூருவில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.