மகளை விரட்டிய பெற்றோர் -மனைவியை விரட்டிய கணவன்- நினைவிழந்து கிடக்கும் பெண்.

 

மகளை விரட்டிய  பெற்றோர் -மனைவியை விரட்டிய கணவன்- நினைவிழந்து கிடக்கும் பெண்.

காதல் திருமணம் செய்து கொண்டு போன பெண் அவரின் கணவரால் தாக்கப்பட்டு நினைவிழந்து கிடக்கும் கொடுமை நடந்துள்ளது .

மகளை விரட்டிய  பெற்றோர் -மனைவியை விரட்டிய கணவன்- நினைவிழந்து கிடக்கும் பெண்.

கர்நாடகாவின் பெங்களூரில் பி.டி.ஆர் கார்டனில் வசிக்கும் ஒரு பெண் , அவரது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்  வசித்து வந்தார் .அந்த பெண் மிகவும் வசதியான வீட்டு பெண் ஆவார் .ஆனால் வயசுக்கோளாறால் ஒரு வாலிபரிடம் காதல் வயப்பட்டு, அவரின்  பெற்றோரின் பேச்சை மீறி திருமணம் செய்து கொண்டார் .இதன் காரணமாக அவரின் பெற்றோர் அவரின் உறவை துண்டித்து விட்டார்கள் .அதன் பிறகு அந்த பெண் கடந்த 12 ஆண்டுகளாக அந்த காதல் கணவரோடு தினமும் அடி உதை வாங்கிக்கொண்டு வாழ்ந்து வருகிறார் .இந்நிலையில் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது .இப்போது இருவரும் பெங்களூருவில் உயர்ந்த பள்ளியில் படித்து வருகின்றனர் .இப்போது அவரின் பிள்ளைக்கு பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வந்தார் .

அதனால் அவர் தனது கணவரிடம் கட்டணம் கட்ட பணம் கேட்டபோது ,அவர் தர மறுத்து அந்த பெண்ணை அடித்து உதைத்துள்ளார் .இதனால் அந்த பெண் நினைவிழந்து மயங்கி கிடந்தார் .மேலும் அவரின் மாமியாரும் இந்த அடி உதை கொடுமைக்கு உடந்தையாக இருந்துள்ளார் .இப்போது மயங்கி கிடந்த அந்த பெண்ணை அம்போவென்று விட்டு விட்டு அவரின் மாமியார் மற்றும் கணவர் இருவரும் ஓடி விட்டார்கள் .அதன் பிறகு அந்த தாயின் நிலையை பார்த்த  அவரின் மகன், அக்கம் பக்கத்தினரிடம் இது பற்றி கூறினார்  அவர்கள் ஓடி வந்து அவரை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .இப்போது போலீசார் அந்த பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் அவரின் கணவர் மீது வழக்கு பதிந்துள்ளார்கள் .

மகளை விரட்டிய  பெற்றோர் -மனைவியை விரட்டிய கணவன்- நினைவிழந்து கிடக்கும் பெண்.