மகளை பாலியல் வன்கொடுமை செய்த விஏஓ : 2வது திருமணம் செய்து கொண்டது அம்பலம்!

 

மகளை பாலியல் வன்கொடுமை செய்த விஏஓ :  2வது திருமணம் செய்து கொண்டது அம்பலம்!

பெற்ற மகளிடம் தவறாக நடந்துகொண்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் : பெற்ற மகளிடம் தவறாக நடந்துகொண்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

marraige

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன்  தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் இரு மகள்களில் மூத்த மகள் தந்தையுடனும் இளைய மகள் தாயாருடனும் வசித்து வந்தனர். 

abuse

இதையடுத்து சரவணன் குடிபோதையில் தனது மகளிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகத் தாயிடம் மூத்தமகள்  கூற, சரவணனின் மனைவி 2018 ஆம் ஆண்டு நவம்பரில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவ்ல் நிலையத்தில் புகார் அளித்தார்.அது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதை அறிந்த சரவணன் தலைமறைவானதால் போலீசார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.

arrest

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அவர்களுக்குக் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. இதனிடையே சரவணன் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அணுகு விரைந்த போலீசார் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: 6-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை ஏமாற்றி வன்புணர்வு செய்த நபர்கள்? போக்ஸோ சட்டத்தில் கைது!..