மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

நான் என் மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள போகிறேன். இதற்கு யாரும் காரணமில்லை

புனே: பிரபல சின்னதிரை நடிகை ஒருவர்  மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி சீரியல் நடிகை பிரக்ன்யா பிரசாந்த் பார்கர். இவருக்கு பார்கர்  என்ற கணவரும் ஸ்ருதி என்ற மகளும் உள்ளனர்.  பிரக்ன்யா தனது கணவர் மற்றும் மகளுடன் புனே அருகிலுள்ள கல்வாவில் வசித்து வந்தார். பார்கர், நேற்று காலை ஜிம்மு சென்றுவிட்டு வீடு திருப்பிய நிலையில் மனைவி தூக்கில்  பிணமாக தொங்க, அருகிலேயே மகளும் இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பார்கர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

suicide

இதையடுத்து அவர்கள் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில், நான் என் மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள போகிறேன். இதற்கு யாரும் காரணமில்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. சில ஆண்டுகளாக பிரக்ன்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.