மகளை கிண்டல் செய்த இளைஞரை கண்டித்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம் : குடிபோதையில் வெறிச்செயல்!

 

மகளை கிண்டல் செய்த இளைஞரை  கண்டித்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம் : குடிபோதையில் வெறிச்செயல்!

மகேஸ்வரன் தனது நண்பர்களான மீனாட்சி சுந்தரம், மாரி ஆகியோருடன் வந்து மணிகண்டனிடம் உன்னை கொல்லாமல்  விடமாட்டேன்’ என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

மகளை கிண்டல் செய்த இளைஞரை  கண்டித்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம் : குடிபோதையில் வெறிச்செயல்!

மதுரை :மகளை கிண்டல் செய்த இளைஞரை தந்தை கண்டித்ததால் அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டகப்படி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்.  லோடுமேனாக  வேலை செய்யும் இவருக்கு  ஹேமலதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பத்தாம் வகுப்பு படித்து வரும் மணிகண்டனின் மகளை  கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மகேஸ்வரன் என்பவர் கிண்டல் செய்துள்ளார்.

women

இதுகுறித்து அந்த சிறுமி தனது அப்பா மற்றும் மாமன் மகாதேவனிடம் கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும்  மகேஸ்வரனை  கண்டித்துள்ளனர். இதையடுத்து நேற்று மகேஸ்வரன் தனது நண்பர்களான மீனாட்சி சுந்தரம், மாரி ஆகியோருடன் வந்து மணிகண்டனிடம் உன்னை கொல்லாமல்  விடமாட்டேன்’ என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து கடந்த 13ஆம் தேதி குடிபோதையிலிருந்த மகேஸ்வரனும் அவரது நண்பர்களும்  உணவு வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மணிகண்டனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மணிகண்டனை த 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்  அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மதிச்சியம் போலீசார், மகேஷ், மீனாட்சி சுந்தரம், மாரி ஆகிய 3 பேரையும்  கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.