மகளை அரவணைத்தப்படி நிம்மதியாக இருக்கும் சேரன்: வைரல் புகைப்படம்!

 

மகளை அரவணைத்தப்படி நிம்மதியாக இருக்கும் சேரன்: வைரல் புகைப்படம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இயக்குநர்  சேரன் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வருகிறார். 

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இயக்குநர்  சேரன் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வருகிறார். 

cheran

பிக் பாஸ் போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இளைஞர்கள் பட்டாளத்துடன் களமிறங்கிய இந்த போட்டியில் அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் களமிறக்கப்பட்டவர் இயக்குநர் சேரன். கடன் நெருக்கடியால் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த சேரன் கிட்டத்தட்ட 90 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து அனைவரது மனதையும் வென்றார்.

cheran

குறிப்பாக லாஸ்லியா – சேரன் இடையேயான உறவு பெரிதும் ரசிக்கப்பட்டது. இயல்பாகவே இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தகப்பனாக  உள்ள சேரன் லாஸ்லியாவிடம்  பழகிய விதமும், அவரின் கண்டிப்பும் லாஸ்லியாவின் குடும்பத்தினர் மத்தியிலேயே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. 

cheran

இருப்பினும் ப்ரீஸ்  டாஸ்கில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த சேரன் மகள், லாஸ்லியா உங்கள பல இடங்களில் விட்டு கொடுத்துட்டா. அதனால் இனி லாஸ்லியாவுடன் பேச கூடாது, நானும் அக்காவும் தான்  உங்களுக்குப் பிள்ளைகள் என்று செல்லமாக கண்டிஷன் போட்டுவிட்டு சென்றார். ஆனாலும் சேரன் அவரை காயப்படுத்தாமலும், லாஸ்லியாவை  விட்டுக்கொடுக்காமலும் பேசினார் சேரன்.

cheran

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சேரன் தற்போது தனது குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார். அப்படி அவர் தன்  மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் உங்கள் மகிழ்ச்சி தொடரட்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.