மகளுடன் வாழமறுத்த மருமகனுக்கு கத்திக்குத்து! மாமனார் சிறைக்கு சென்ற அவலம்

 

மகளுடன் வாழமறுத்த மருமகனுக்கு கத்திக்குத்து! மாமனார் சிறைக்கு சென்ற அவலம்

சென்னை அயனாவரத்தில் பிரபாகர், கலைவாணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகள் சந்தியாவை அயனாவரத்தில் சென்ட்ரிங் வேலை செய்யும் காந்திராஜன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணம் ஆன முதலே காந்திராஜன் தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. 

மகளுடன் குடும்பம் நடத்தாமல் குடும்பத் தகராறில் ஈடுபட்ட மருமகனை கொல்ல முயன்ற மாமனார் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அயனாவரத்தில் பிரபாகர், கலைவாணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகள் சந்தியாவை அயனாவரத்தில் சென்ட்ரிங் வேலை செய்யும் காந்திராஜன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணம் ஆன முதலே காந்திராஜன் தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. 
இதேபோல் கடந்த வாரம் காந்திராஜன், மனைவியுடன் குடும்பத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் வீடே அமர்க்களப்பட சந்தியா கோபத்தில் புறப்பட்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
வந்துள்ளார். கடந்த வாரம் காந்திராஜனுடன் சண்டையிட்டுக்கொண்டு மனைவி சந்தியா அயனாவரம் மாடவீதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதை அடுத்து மகளை சமரசம் செய்து வாழவைக்க அவரை அழைத்துக் கொண்டு பிரபாகர் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் காந்திராஜன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது காந்திராஜனுக்கும் அவரது மாமனார் பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் அடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தன்னுடைய மகளுடன் குடும்பம் நடத்த துப்பில்லாமல் என்னை அடிக்கிறாயா எனக்கூறி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் காந்திராஜனின் கழுத்தை அறுத்துள்ளார். இதையடுத்து காந்திராஜன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.