மகளுக்கு திருமண டென்ஷன்! மகளின் காலில் விழுந்த தாய்!! 

 

மகளுக்கு திருமண டென்ஷன்! மகளின் காலில் விழுந்த தாய்!! 

“காலில் விழுந்து ஆசி வாங்குங்கோ” என புரோகிதர் கூறவும் பதட்டத்தில் மணமகளின் தாய், அவரது மகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

“காலில் விழுந்து ஆசி வாங்குங்கோ” என புரோகிதர் கூறவும் பதட்டத்தில் மணமகளின் தாய், அவரது மகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

விசேஷ தினங்களிலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களிலும் பெற்றோர்கள் காலில் விழுந்து குழந்தைகள் ஆசிர்வாதம் வாங்குவார்கள். பெற்றோர்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெரியவர்களின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து ஆசிபெருவர். ஆசிர்வாதம் என்பது தன்னை விட பெரியவர்களின் காலில் தான் விழுந்து வாங்கவேண்டும் என்பது ஐதீகம். தன்னை விட சிறியவர்களின் காலில் விழுந்து பொதுவாக யாரும் ஆசிர்வாதம் வாங்க மாட்டார்கள். 

 

 

ஆனால் திருமணம் ஒன்றில், புரோகிதர் மணமக்கள் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகள் என கூறியவுடன், மகளுக்கு திருமணமான பதட்டத்தில் தன்னைதான் புரோகிதர் கூறுகிறார் என நினைத்த தாய், திருமணமான தனது மகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். இது திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.