மகளின் வாக்குமூலத்தால் எஸ்கேப் ஆன வனிதா: பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்தது இதுதானாம்!

 

மகளின் வாக்குமூலத்தால் எஸ்கேப் ஆன வனிதா: பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்தது இதுதானாம்!

தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் மீது கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நேற்று நடைபெற்றது.

ஒருதலைபட்சமாக நடந்து கொண்ட தெலுங்கானா காவல்துறை  மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்போம் என்று வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

vanitha

தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் மீது கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நேற்று நடைபெற்றது. அதாவது வனிதா விஜயகுமாரின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜ், வனிதா மகள் ஜெனிதாவை  தந்தையிடமிருந்து கடத்திவந்ததாகத் தெலுங்கானா போலீசில் கடந்த பிப்ரவரி மாதம்  புகார் அளித்தார். ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவரை தேடிவந்த தெலங்கானா போலீஸ் பிக்பாஸ் வீட்டில் வனிதா இருந்ததை அறிந்து அவரை கைது செய்ய தமிழக போலீசாரின்  உதவியுடன் தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

vanitha

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர், வனிதா விஜயகுமார் அவரது  மகளை கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு பொய்யானது. வனிதா போலீசுக்கும் கணவருக்கும் தெரிந்து தான் குழந்தையை அழைத்து கொண்டு வந்தார். வனிதாவை பழிவாங்கும் நோக்கத்தோடு தான் போலீஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளது. ஏற்கனவே குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டோம். அதை மறைத்து போலீசாரை ஆனந்தராஜ் அழைத்து வந்துள்ளார். இருப்பினும் சட்டத்தை மதித்து தெலுங்கானா போலீசார் முன் வனிதாவின் குழந்தை ஜெனிதாவை ஆஜர்படுத்தினோம் குழந்தை தந்தை வேண்டாம், தாயிடம் தான் இருப்பேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளது. அதை போலீசாருக்கும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். வனிதா விஜயகுமார் விவகாரத்தில் தெலுங்கானா போலீஸ் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது. இதனால் அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த பிறகு மனித உரிமை ஆணையத்தில் தெலுங்கானா காவல்துறை மீது புகார் அளிப்போம்’ என்றார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் வனிதா கைது செய்யப்படுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், தற்போது வனிதா மகள் ஜெனிதாவின் வாக்குமூலத்தால்  தப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.