மகன் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது… எச்.ஐ.வி ரத்தம் அளித்த இளைஞரின் தந்தை காவல்துறையில் புகார்

 

மகன் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது… எச்.ஐ.வி ரத்தம் அளித்த இளைஞரின் தந்தை காவல்துறையில் புகார்

எச்.ஐ.வி ரத்தம் அளித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர்: எச்.ஐ.வி ரத்தம் அளித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. ஆனால் அந்த ரத்தத்தில் எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழக மக்களுமே அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையே ரத்தத்தை தானமாக வழங்கிய கமுதியை சேர்ந்த இளைஞர் குற்றவுணர்வு காரணமாக தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து அவருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் இருக்கிறது என அவரது தந்தை தெரிவித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், மகனின் உடற்கூறு ஆய்வை மதுரை மருத்துவர்களை தவிர்த்து பிற மருத்துவர்களை வைத்து நடத்த வேண்டும். இந்த உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.