மகன் துருவ்க்காக சீயான் விக்ரம் எந்த அளவுக்கு கீழே இறங்கி வந்திருக்கிறார் தெரியுமா!?

 

மகன் துருவ்க்காக சீயான் விக்ரம் எந்த அளவுக்கு கீழே இறங்கி வந்திருக்கிறார் தெரியுமா!?

‘வர்மா’ படம் தொடர்பாக எழுந்த பஞ்சாயத்துக்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.எதற்காக இவ்வளவு சிக்கலான முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து இரண்டு தரப்பும்,மிக நெருக்கமான ஆட்களிடம் கூட பகிந்து கொள்ள மறுக்கிறார்கள்

‘வர்மா’ படம் தொடர்பாக எழுந்த பஞ்சாயத்துக்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.எதற்காக இவ்வளவு சிக்கலான முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து இரண்டு தரப்பும்,மிக நெருக்கமான ஆட்களிடம் கூட பகிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

விக்ரம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் இயக்குனர்கள் கேட்டபோது கூட,’பாலா என்னோட நண்பன்.அவரோட இருக்கிற நட்பு என்னைக்கும் மாறாது.தவிக்க முடியாமல் எடுக்கப்பட்ட இந்த செய்தியை சொல்வதால் என்ன நடந்துவிடப்போகுது! வேண்டாமே ப்ளீஸ்’ என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறாராம் சீயான்.

சினிமாவில் இவ்வளவு காலம் இருந்தும் மகன் துருவ் நடிக்கவிருந்த முதல் படம் இவ்வளவு சிக்கலாகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவரது பேச்சில் தெரிகிறது.என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான ஆட்கள்.

vikram and dhruv vikram

எல்லாத்துக்கும் சேர்த்து அடுத்து எடுக்கவிருக்கிற ‘ஆதித்ய வர்மா’வை பிரம்மாண்டமாக பண்ணிவிட வேண்டும் என்பதில் படு தீவிரமாக இருக்கிறார்.இந்த புது ப்ராஜெக்டைப் பொறுத்தவரை டிசைட்டிங் அத்தாரிட்டி விக்ரம்தான்.அவர்தான் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனிடம் பேசி,இந்தப்படத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.நேரடி படங்கள் பண்ணவே நேரம் இல்லாமல் இருக்கும் ரவி.கே.சந்திரன் ரீமேக் படத்திற்கு வந்திருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு சீயான் பேசியிருப்பார் என்பது தெரிகிறது.

உடன் நடிக்கும் நடிகர்கள்,டெக்னீசியன் எல்லாம் விக்ரம் சொன்ன ஆட்கள்தான்.தவிர இப்போது எடுக்கப்பட விருக்கும் படத்திற்கான மொத்த செலவையும் செய்யப்போவது சீயான்தான்.ஏற்கனவே பாலா கொடுத்த பட்ஜெட்டைவிட கூடுதலாக செலவு செய்திருப்பதால், மேற்கொண்டு நீங்கள் செலவு செய்யவேண்டாம் என்று தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டார் சீயான்.

முதலில் படம் முடிந்து ரிலீஸ் ஆகட்டும்.அப்புறம்,லாப நஷ்டக்கணக்கை பார்த்திக்கலாம் என்று சீயான் சொல்ல தயாரிப்பாளரும் அதுக்கு சம்மதித்திருக்கிறார்.சீக்கிரமா வாங்க சின்ன ‘சீயான்’!