மகனின் காதலியை கட்டாய தாலிகட்டி பாலியல் வன்கொடுமை செய்த அமமுக பிரமுகர்…நடுங்க வைக்கும் சம்பவம்!

 

மகனின் காதலியை கட்டாய தாலிகட்டி பாலியல் வன்கொடுமை செய்த அமமுக பிரமுகர்…நடுங்க வைக்கும் சம்பவம்!

அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம் (வயது 38). அ.ம.மு.க.வை பிரமுகரான இவர் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் முகேஷ்கண்ணன்  ஐ.டி.ஐ.யில் உடன் படிக்கும் மாணவியை  காதலித்துள்ளார். இதையடுத்து காதலர்கள் இருவரும் படிப்பு முடித்து சென்னையில் வேலைபார்த்து வந்துள்ளனர்.  இவர்கள் காதல் கருப்பு நித்யானந்ததிற்கு பிடிக்கவில்லை. 

ttn

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அந்த பெண்ணை தனியாக சந்தித்த கருப்பு நித்யானந்தம் என்னுடன் வந்தால் மகனுடன் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். நம்பி சென்ற அந்த பெண்ணை  செம்போடை பகுதிக்கு காரில் கடத்தி சென்று அங்குள்ள ஒருகடையில் மிரட்டி தாலிகட்டியதுடன்  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது. 

ttn

இதையடுத்து அங்கிருந்த தப்பி சென்ற அந்த பெண் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கருப்பு நித்தியானந்தம் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை  செய்தது தெரிய வந்தது. மேலும் அவருக்கு அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி பவுன்ராஜவள்ளி ஆகியோர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கருப்பு நித்தியானந்தம், சக்திவேல், பவுன்ராஜவள்ளி ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை  வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  15 நாட்கள் நீதிமன்ற காவலில்  சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.