மகனின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விக்ரம் 

 

மகனின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விக்ரம் 

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக்கி வந்த ஆதித்திய வர்மா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக்கி வந்த ஆதித்திய வர்மா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ஆதித்ய வர்மா.  தெலுங்கில் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ளது.

dhruv

இயக்குநர் பாலா இயக்கி வந்த இந்த படத்தின் படத்தின் காட்சிகள் எதிர்பார்த்தது போல் இல்லை என்றும்  மீண்டும் இந்த படத்தை இயக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி இயக்குநர் கிரீஷையா இயக்கத்தில்,  மீண்டும் ‘ஆதித்திய வர்மா’ என்ற பெயரில் கதாநாயகியாகப் பாலிவுட் நடிகை பனித்தா சந்து நடித்துள்ளார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

dhruv

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. அதற்கான விடியோவை துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கடைசி டேக் எடுத்த போது நடிகர் விக்ரமும் கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.