ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

 

ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதித்திருந்த தடையை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதித்திருந்த தடையை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு மே 15-ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் 2007-ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது  ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கின் நிதி மோசடி குறித்த அம்சங்களை விசாரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினர். அதனையடுத்து. மே 31-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1-ம் தேதிவரை தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28-ம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டது.  இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை அக்டோபர் 25-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.