“ப்பூ” ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்ததற்கு கார்த்தியின் கமெண்ட்!

 

“ப்பூ” ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்ததற்கு கார்த்தியின் கமெண்ட்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்டு 106 நாட்கள் ஆன நிலையில் அவர் தற்போது வெளிவர உள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்டு 106 நாட்கள் ஆன நிலையில் அவர் தற்போது வெளிவர உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது.

ttn

ரூ.2 லட்சம் சொந்த ஜாமீனில், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்பது உள்பட நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஒற்றை வார்த்தையில் ப.சிதம்பரத்தின் மகனும் எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “Phew (ப்பூ…) 106வது நாளிலாவது கிடைத்ததே” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

வாய்மையே வெல்லும் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.