போஸ்ட்பார்டம் ப்ளூஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சந்தியா ! 

 

போஸ்ட்பார்டம் ப்ளூஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சந்தியா ! 

காதல் திரைப்படம் மூலம் திரையுலகில் கால்பதித்த நடிகை சந்தியா போஸ்ட்பார்டம் ப்ளூஸ் என்ற வினோத நோயால் 2 வருடங்கள் அவதிப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். 

காதல் திரைப்படம் மூலம் திரையுலகில் கால்பதித்த நடிகை சந்தியா போஸ்ட்பார்டம் ப்ளூஸ் என்ற வினோத நோயால் 2 வருடங்கள் அவதிப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். 

2004ஆம் ஆண்டு காதல் என்ற படத்தில் அறிமுகமானவர் சந்தியா. இந்த டத்தில் சந்தியாவின் நடிப்பின் காரணமாக இவரை ரசிகர்கள் அனைவரும் காதல் சந்தியா என்று அழைத்தனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து காதல் சந்தியா தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரியான வாய்ப்பு அமையவில்லை அவர் நடித்த ஒரு சில படங்களும் ஓடவில்லை. இதனால் சினிமாவில் இருந்து விலகி, 2015ல் சந்திரசேகரன் என்பவரை கேரளாவில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைத்திருந்த பணத்தை சென்னையில்  வெள்ளப்பெருக்கு நிவாரண நிதிக்கு அளித்தார் நடிகை சந்தியா.

சந்தியாவிற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிளில் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் எனப்படும் மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் காரணமே இல்லாமல் தினமும் மாலையில் 5 மணி முதல் 7 மணி வரை தொடர்ந்து அழுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார் நடிகை சந்தியா. சுமார் இரண்டரை ஆண்டு காலமாக சந்தியா இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த சந்தியா தீவிர சிகிச்சை மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பில் நோயில் இருந்து விடுபட்டு வந்துள்ளார். இந்த நோயால் மற்ற தாய்மார்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான விழிப்புணர்வையும் தற்போது ஏற்படுத்தி வருகிறார் நடிகை சந்தியா.