போலீஸ் நிலையம் வந்தார் கடத்தப்பட்ட இளமதி! – பெற்றோருடன் செல்ல விருப்பம்

 

போலீஸ் நிலையம் வந்தார் கடத்தப்பட்ட இளமதி! – பெற்றோருடன் செல்ல விருப்பம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் கடத்தப்பட்ட இளமதியை நாடே தேடி வந்த நிலையில் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் அவர் ஆஜரானர். தன்னுடைய பெற்றோருடன் செல்ல இளமதி விரும்புவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண்டியூரில்  திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடியை கடுமையாக தாக்கி, காரில் கடத்தி சென்றனர்.

ilamathi-selvan

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று ஈஸ்வரன் மற்றும் காதலர் செல்வனை மீட்டனர். ஆனால் இளம் பெண் இளமதியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்ன ஆனார் என்ற கவலை பலருக்கும் ஏற்பட்டது. இளமதி பற்றி நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது. 
இந்நிலையில் சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராகியுள்ளார். தனது வழக்கறிஞர் சரவணன் உடன் அவர் ஆஜராகியுள்ளார். தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்புவதாக இளமதி தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.