போலீஸ் துரத்தியது -கார் கவிழ்ந்தது – விதி வலியது-பலாத்கார குற்றவாளி பலி. 

 

போலீஸ் துரத்தியது -கார் கவிழ்ந்தது – விதி வலியது-பலாத்கார குற்றவாளி பலி. 

ஹைதராபாத் அருகே ஜஹீராபாத்தில் திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று குற்றவாளிகளை போலீஸ் துரத்தியபோது அதில்  ஒருவர் சாலை விபத்தில் இறந்தார் மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

ஹைதராபாத் அருகே ஜஹீராபாத்தில் திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று குற்றவாளிகளை போலீஸ் துரத்தியபோது அதில்  ஒருவர் சாலை விபத்தில் இறந்தார் மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
சென்ற வாரம் பிதாரில் இருந்து சுரயாபேட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை பஸ்ஸில் இருந்த தனது மகனுடன் மூன்றுபேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் செக்கிங் செய்வதுபோல நடித்து  பஸ்ஸிலிருந்து அந்த பெண்ணை இறக்கி, இருவர் சாமான்களை சரிபார்த்து நடித்து மகனை அவர்களுடன் வைத்திருந்தபோது, மற்றவர் அந்தப் பெண்ணை ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

car-chasing

இதையடுத்து பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், புதன்கிழமை காலை மேடக் மாவட்டம் ராய்கோடு மண்டலத்தில் உள்ள மகாபூட்பூர் கிராமத்திற்கு அருகே காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.
போலீஸைப் பார்த்ததும், குற்றவாளிகள் காரில் தப்பிச் சென்றபோது போலீசார் அவர்களைத் துரத்தினார்கள். அப்போது வேகமாக போன கார் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மற்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
போலிசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். .