‘போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுத்தால் உண்மை வெளிவரும்’ – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 

‘போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுத்தால் உண்மை வெளிவரும்’ – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சிலருக்கு போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுத்தால் தான் உண்மை வெளிவரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஜெயலலிதா மரண விவகாரத்தில் சிலருக்கு போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுத்தால் தான் உண்மை வெளிவரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணம் தொடர்பாக சந்தேக வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். குறிப்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் என்றும், அவரிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.  

சி.வி.சண்முகம் இவ்வாறு பேசிய சில மணி நேரங்களில், முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதா மரண விவகாரத்தில் கொடுக்கவேண்டிய விதத்தில் சிலருக்கு போலீஸ் ட்ரீட்மெண்ட் கொடுத்தால், தானாக உண்மை வெளிவரும்” என தெரிவித்துள்ளார்.