போலீஸ்காரர் பைக்கையே ஆட்டையப்போட்ட பலே திருடன்!!

 

போலீஸ்காரர் பைக்கையே ஆட்டையப்போட்ட பலே திருடன்!!

கோயம்பேட்டில் போலீஸ் தலைமைக் காவலரின் பைக் திருடர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோயம்பேட்டில் போலீஸ் தலைமைக் காவலரின் பைக் திருடர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (44).  ரவுடிகள் தடுப்பு குற்றப்பிரிவில் தலைமைக் காவலராக உள்ளார்.  ரகு நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வெளியூர் செல்லும் தனது நண்பரை வழியனுப்புவதற்காக கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் வந்தார். 

பின்னர் வீடு திரும்பும் வழியில் நூறடி சாலையில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். டீ குடித்து வந்து பார்த்தபோது கடை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த  மோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அடையாளம் தெரியாத நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நூறடி சாலையில் உள்ள  கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.