போலீஸுக்கு தண்ணி காட்டிய ரவுடி.. கயிறு கட்டி அலேக்காக பிடித்த போலீஸ் !

 

போலீஸுக்கு தண்ணி காட்டிய ரவுடி.. கயிறு கட்டி அலேக்காக பிடித்த போலீஸ் !

ரவுடி பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரவுடி பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதனால் அவரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வந்தனர். பாஸ்கரை பிடிப்பதற்காக  காவல் ஆய்வாளர் சீதாலட்சுமி தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் போலீசார் அவரை பிடிக்க முயன்ற போதும், எங்காவது சென்று மறைந்து கொண்டு போலீசாருக்கு தண்ணி காட்டி வந்துள்ளார். 

ttn

அதன் பின்னர், நேற்று அவர் சுத்தமல்லி அருகே பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அவரை பிடிக்க சென்றுள்ளனர். அதனை அறிந்த பாஸ்கர் அங்கிருந்த தாமரை குளத்தில் குதித்துள்ளார். அவரை பிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானத்த போலீசார் படகு மூலம் அவரை விரட்டி சென்றுள்ளனர்.  குளத்தில் போலீஸுக்கு தண்ணி காட்டி வந்த ரவுடி பாஸ்கரை கயிறு கட்டி போலீசார் பிடித்துள்ளனர். அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ttn