போலீசுக்குள் ஏற்பட்ட ‘காதல், மோதல்,சாதல்’ ? -பெண் போலீசை சுட்டு தற்கொலை செய்த ஆண் போலீஸ் ..

 

போலீசுக்குள் ஏற்பட்ட ‘காதல், மோதல்,சாதல்’ ? -பெண் போலீசை சுட்டு தற்கொலை செய்த ஆண் போலீஸ் ..

சுடப்பட்ட எஸ்.ஐ. பிரீதி அஹ்லவத் பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் பணிபுரிந்தார் . 
அதிகாரிகள் கூற்றுப்படி, இந்த சம்பவம் குறித்து இரவு 9.30 மணியளவில் அவர்களுக்கு தகவல் வந்ததாகவும் சப் இன்ஸ்பெக்டர்  தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும் கூறினார்கள்.

டெல்லி காவல்துறையின் 26 வயது பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிரீதி அஹ்லவத் ரோஹினி கிழக்கு மெட்ரோ நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். சுடப்பட்ட எஸ்.ஐ. பிரீதி அஹ்லவத் பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் பணிபுரிந்தார் . 
அதிகாரிகள் கூற்றுப்படி, இந்த சம்பவம் குறித்து இரவு 9.30 மணியளவில் அவர்களுக்கு தகவல் வந்ததாகவும் சப் இன்ஸ்பெக்டர்  தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும் கூறினார்கள்.

delhi-sub-ins

மேலும் “துப்பாக்கி சூடு நடத்திய சந்தேகதுக்கிடமான் நபர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், அப்பகுதியின் சி.சி.டி.வி காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன” என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் (ரோகிணி) எஸ்.டி. மிஸ்ரா  தெரிவித்திருந்தார்.ஆனால் சில தகவல்கள்  எஸ்.ஐ. தீபன்ஷு, கொலையாளி என்று கூறுவதால் பரபரப்பு நிலவுகிறது .

டெல்லி காவல்துறையில் சக சப்-இன்ஸ்பெக்டரால் அஹ்லவத் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது பின்னர் தெரியவந்தது. பெண் காவலரை சுட்டுக் கொன்ற எஸ்.ஐ. தீபன்ஷுவும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். பின்னர் அவரது உடல் ஹரியானாவில் கர்னல் மாவட்டத்திற்கு அருகே ஒரு காரில் கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரும் ஒன்றாக போலீஸ் பயிற்சியெடுத்து  2018 ஆம் ஆண்டில் டெல்லி காவல்துறையில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தீபன்ஷு ஏன் பெண் காவலரைக் கொன்றார் மற்றும் தன்னைத்தானே எதனால் சுட்டுக் கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.