போலி பத்திரம் தயாரிக்கும் பயங்கரம் -வீட்டிலிருக்கும்போதே வீட்டை  ஆட்டைய போடும் கும்பல்… 

 

போலி பத்திரம் தயாரிக்கும் பயங்கரம் -வீட்டிலிருக்கும்போதே வீட்டை  ஆட்டைய போடும் கும்பல்… 

ஹைதராபாத்தில் நிலம் மற்றும் வீடுகளுக்கு  போலியான  ஆவணங்களை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்த ஏழு பேர் கொண்ட கும்பலை  போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 

ஹைதராபாத்தில் யாதத்ரி மாவட்டத்தின் போங்கிர் நகரத்தைச் சேர்ந்த  பரிதம் சேகர் (37), அனுகு மாதவ் ரெட்டி (38), பரிதம் சுரேஷ் (32), அனுகு ஜெயபால் ரெட்டி (36) என்ற , இந்த நான்கு பேரும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மற்றும் அசல் போலவே  போலி பத்திரங்களை  உருவாக்கிய யெல்மா ராமலிங்கேஸ்வர் ரெட்டி (35) ஒயின் ஷாப் பெடபுடி நரேஷ் (32),  ஆவணங்களுக்கான போலியான உள்ளடக்கத்தை தயாரிக்கும் பணியில் அகுலா ஸ்ரீகாந்த் (40)ஆகியோர் இந்த பத்திர மோசடி வேலைகளில் ஈடுபட்டனர் 

arrest

இந்த நபர்கள் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இப்படி பல இடங்கள் ,வீடுகளின் போலியான பத்திரங்கள் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.இந்த கும்பல்  மோசடி பரிவர்த்தனைகளை நடத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தினர்.மேலும் அவர்கள் மீது சவுத்துப்பால் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுடன் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று  ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பகவத் தெரிவித்தார்.