போலி கணக்குகளின் மூலம் சிறுமிகளின் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்தவர் கைது!

 

போலி கணக்குகளின் மூலம் சிறுமிகளின் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்தவர் கைது!

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியிலிருந்து சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள்  பதிவேற்றம் செய்யப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். 

போலி கணக்குகளின் மூலம் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளை  வைத்து எடுக்கப்படும் ஆபாச படங்களை பார்ப்பவரின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதனால் குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஆபாச  வீடியோக்கள் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கூடுவாஞ்சேரி பகுதியிலிருந்து சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள்  பதிவேற்றம் செய்யப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். 

ttn

அதேசமயம் கடந்த இரண்டு நாட்களாக அந்த ஐபி முகவரிலிருந்து  நாமக்கல்லில் இருந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து நாமக்கல் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி என்பவரை கைது செய்தனர்.

ttn

பின்னரே அவரிடமிருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.