போறதுதான் போனீங்க, ரஜினியையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல – இளங்கோவன் நக்கல்

 

போறதுதான் போனீங்க, ரஜினியையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல – இளங்கோவன் நக்கல்

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வடுகப்பட்டி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நேற்று நடந்தது. திமுக கூட்டணி கட்சியினரோ, தினகரன் கட்சியினரோ, கமலஹாசனோ, இவ்வளவு ஏன் மாவட்ட தேர்தல் அலுவலரோகூட மறுவாக்குப்பதிவு வேண்டும் என்று கோரிக்கை விடுக்காத போதும், மறுவாக்குப்பதிவுக்கு என்ன அவசியம் வந்தது என்பது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான‌ இளங்கோவன் கேள்வி.

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வடுகப்பட்டி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நேற்று நடந்தது. திமுக கூட்டணி கட்சியினரோ, தினகரன் கட்சியினரோ, கமலஹாசனோ, இவ்வளவு ஏன் மாவட்ட தேர்தல் அலுவலரோகூட மறுவாக்குப்பதிவு வேண்டும் என்று கோரிக்கை விடுக்காத போதும், மறுவாக்குப்பதிவுக்கு என்ன அவசியம் வந்தது என்பது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான‌ இளங்கோவன் கேள்வி. ஒருவேளை குச்சனூர் கல்வெட்டில் எழுதப்பட்டது உண்மையாகும் வரை மறுதேர்தல் நடத்திக்கொண்டே இருப்பார்கள் போலிருக்கிறது. ஒருவழியாக மறுவாக்குப்பதிவும் முடிந்துவிட்டது.

மறுவாக்குப்பதிவை பார்வையிட வந்திருந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். காலையில் பேப்பர் படித்துக்கொண்டே காஃபி குடிக்கும்போது, கால் டீ ஸ்பூன் நக்கல், அரை டீ ஸ்பூன் நையாண்டியை எல்லாம் சேர்த்து கலக்கித்தான் இளங்கோவன் காஃபி குடிப்பார் போலிருக்கிறது. மத்திய மாநில அரசுகளையும் அவர்களின் விதிமீறல்களுக்கு துணைபோகும் அதிகாரிகளையும் கலாய்த்த இளங்கோவன் பேட்டியில் ஹைலைட் ரஜினியையும் கோர்த்துவிட்டதுதான்.

தேர்தல் முடிந்த பிறகு வீட்டில் சும்மாதானே இருக்கப் போறோம், எதுக்கும் பழகிக்குவோம்னுதான் மோடி இமயமலையில் தியானத்துக்கு போனதாகவும், இமயமலை என்றதும் ஞாபகத்துக்கு வரும் சீனியர் ரஜினியையும் அவர் அழைத்துக்கொண்டு போயிருக்கலாம் என நான்ஸ்டாப்பாக கலாய்த்து சென்றார் இளங்கோவன்.