போரூர் முதியோர் இல்லத்தில் 85 வயது மூதாட்டிக்கு கொரோனா! அச்சத்தில் மக்கள்!

 

போரூர் முதியோர் இல்லத்தில் 85 வயது மூதாட்டிக்கு கொரோனா! அச்சத்தில் மக்கள்!

இதையடுத்து அவர் உடனடி மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். 

போரூர் அடுத்த காரம்பாக்கம், செட்டியார் அகரம் பகுதியில்  தனியார் முதியோர் இல்லம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 30ற்கும் மேற்பட்ட முதியவர்கள் வசித்து வருகின்றனர். 

இதில் 85 வயதான மூதாட்டி ஒருவருக்கு திடீர் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதில்  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.  இதையடுத்து அவர் உடனடி மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். 

rr

மேலும் இதுகுறித்து தகவலறிந்த  வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் முதியோர் இல்லம் இருந்த பகுதியை சுற்றி  கிருமிநாசினிகள் தெளித்து வருகின்றனர்.

மேலும் இந்த முதியோர் இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதால் அவர்களை அங்கேயே தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ளவர்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வருகிறது.  

rr

வயதான மூதாட்டிக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என   அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.