” போன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டுனா போய் சேர்ந்துடுவே ‘ -தட்டிக்கேட்ட பொறியாளர் மீது தாக்கு.. 

 

” போன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டுனா போய் சேர்ந்துடுவே ‘ -தட்டிக்கேட்ட பொறியாளர் மீது தாக்கு.. 

பெங்களூருவில், மகாதேவபுராவில் வசிக்கும் அனுராக் குமார் என்ற  ஒரு மென்பொருள் பொறியாளர் சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் பைக்கில் வெங்கடேஸ்வரா நகரில் போய்க்கொண்டிருந்தார்.

பெங்களூருவில், மகாதேவபுராவில் வசிக்கும் அனுராக் குமார் என்ற  ஒரு மென்பொருள் பொறியாளர் சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் பைக்கில் வெங்கடேஸ்வரா நகரில் போய்க்கொண்டிருந்தார். அப்போது  அவருக்கு முன்னால் ஒருவர் பைக்கில் போன் பேசிக்கொண்டே ஒற்றைக்கையால் வண்டி ஓட்டிக்கொண்டு போனார். அதனால் அவர் இண்டிகேட்டர் போடாமல் திரும்பியுள்ளார், இதனால் அவரின் பின்னால வந்த அனுராக் பேலன்ஸ் தடுமாறி கீழே விழுந்தார், அதனால் கோபமுற்ற அநுராக் முன்னாள் போன பைக் நபரிடம் இப்படி போன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டாதே என்று ஆங்கிலத்தில் சத்தம் போட்டுள்ளார். இதனால் கடுப்பான அந்த நபர் தன்னுடைய நண்பரகள் சிலரின் உதவியோடு அந்த பொறியாளரை தாக்கியுள்ளார்.
தாக்குதலால்  காயமுற்ற அனுராக் அருகிலுள்ள காவல்நிலையத்தில் அந்த நபர்கள் மீது புகாரளித்தார், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.