“போனுக்காக உசைன் போல்டை மிஞ்சும் ஓட்டம்”போனை பறித்தவரை விரட்டி பிடித்த வாலிபர்  

 

“போனுக்காக உசைன் போல்டை மிஞ்சும் ஓட்டம்”போனை பறித்தவரை விரட்டி பிடித்த வாலிபர்  

பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த யஷ்வந்த் என்ற வாலிபர் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் பைக்கில் மொபைலில் பேசிக் கொண்டு வந்துகொண்டிருந்த போது, இம்ரான்கான் ,உமர்சையாத் என்ற இரண்டு வாலிபர்கள் அவருடைய மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓடினார்கள். பின்னர் இதனால் பதட்டமடைந்த யஸ்வந்த் அவர்களை விரட்டிச்சென்றார்.

பெங்களூருவில் சாலையில் மொபைல் போனை பறித்து சென்ற இருவரை ஒரு 18 வயது வாலிபர் விரட்டி பிடித்தார்.
பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த யஷ்வந்த் என்ற வாலிபர் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் பைக்கில் மொபைலில் பேசிக் கொண்டு வந்துகொண்டிருந்த போது, இம்ரான்கான் ,உமர்சையாத் என்ற இரண்டு வாலிபர்கள் அவருடைய மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓடினார்கள். பின்னர் இதனால் பதட்டமடைந்த யஸ்வந்த் அவர்களை விரட்டிச்சென்றார். அப்போது பொதுமக்களும் அவரோடு சேர்ந்து அவர்களை விரட்டியபோது, அந்த நபர்கள் இவரின் தலையில் மொபைல் போன் கொண்டு தாக்கினார்கள். அதனால் அவரின் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அவர்களை விரட்டி பிடித்தனர். பிறகு அவர்களிடமிருந்து மொபைலை அவர் வாங்கினார். அதற்குள் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்