போதை மாத்திரை தராததால் ஆத்திரம்: மருந்து கடையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்!

 

போதை மாத்திரை தராததால் ஆத்திரம்: மருந்து கடையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்!

இளைஞர்கள் சிலர்  போதை மாத்திரை கேட்டு மருந்துக்கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம்: இளைஞர்கள் சிலர்  போதை மாத்திரை கேட்டு மருந்துக்கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பேருந்து நிலையம் அருகே சரவணன் என்பவர் மருந்து கடை வைத்துள்ளார். இவர் கடைக்கு கடந்த சில நாட்களாகவே கல்லூரி மாணவர்கள் சிலர் தூக்க மாத்திரை கேட்டு வந்துகொண்டிருந்தனர். இதனிடையே நேற்று  இரவு கடைக்கு வந்த இளைஞர்கள் அதிகப்படியான தூக்க மாத்திரையைக் கேட்டு தகராறு செய்துள்ளனர்.  ஆனால் மருத்துவரின் ரசீது இருந்தால் தான் மாத்திரை தரமுடியும் என சரவணன் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் சரவணன் மற்றும் மருந்து கடையை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அப்படுத்தி மக்கள் மாணவர்களைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.