’போதை மருந்து கடத்தல் கும்பலை விட்டு விரைவில் வெளியே வருவேன்’…நடிகை த்ரிஷாவின் நெருங்கிய தோழி வாக்குமூலம்…

 

’போதை மருந்து கடத்தல் கும்பலை விட்டு விரைவில் வெளியே வருவேன்’…நடிகை த்ரிஷாவின் நெருங்கிய தோழி வாக்குமூலம்…

போதைப் பொருள் கடத்தும் கும்பலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதில் நான் சில சதிகாரர்களால் சிக்கவைக்கப்பட்டேன்

‘போதைப் பொருள் கடத்தும் கும்பலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதில் நான் சில சதிகாரர்களால் சிக்கவைக்கப்பட்டேன்’ என்று கலங்கிய கண்களுடன் பேட்டி அளித்துக்கொண்டிருக்கிறார் அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளும் தெலுங்கு நடிகை சார்மி.

charmi

தமிழில் ’காதல் அழிவதில்லை’, ’காதல் கிசுகிசு’, ’ஆஹா எத்தனை அழகு’,’லாடம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சார்மி தெலுங்கு பட உலகிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஏற்கனவே போதை மருந்து சப்ளை செய்து போலீசில் சிக்கிய தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது அவர்கள் நவதீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர்கள் பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட 12 பேர் பெயர்களை வெளியிட்டனர்.

 

charmi

அச்செய்தி ஆந்திரப் பட உலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் சம்பந்தப்பட்ட பலரும் தொடர்ந்து போலீஸ் விசாரணைகளுக்கு ஆஜராகிவந்தனர். அப்புகார் குறித்து இதுவரை கருத்து சொல்லாமல் இருந்த சார்மி தற்போது முதல் தடவையாக பேசியபோது “போதை பொருள் கும்பலுடன் என்னை தொடர்புபடுத்தியது எனது வாழ்க்கையின் மோசமான கட்டம். நான் அதிகமாக அழுதேன். என்னை மட்டுமின்றி எனது மொத்த குடும்பத்தையும் இது பாதித்தது. எல்லோரும் சில மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். இப்படிப்பட்ட சட்டவிரோத செயலில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.போலீஸ் விசாரணையிலும் நான் இதைத்தான் தெரிவித்தேன்.இந்த பிரச்சினையில் இருந்து சுத்தமாக நான் வெளியே வருவேன்’’என்றார்.

charmi

அடுத்து தனது திருமணம் குறித்துப் பேசிய சார்மி,’’என்னிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று 18 வயதில் இருந்தே என்னிடம் கேட்டு வருகிறார்கள். எனக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.” என்று பதிலளிக்கிறார். சமீபத்தில் கடந்து சென்ற த்ரிஷாவின் பிறந்த நாளன்று அவரை அழுத்தமாகக் கட்டிப்பிடித்து முத்தமிடும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று சார்மி கேட்டதும் அதற்கு த்ரிஷா ஓ.கே. சொன்னதும் ஏனோ இந்த சமயத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது.