போதையில் தடுமாறிய இந்திய கிரிக்கெட் அணி….  தோல்விக்கு காரணம் ரவிசாஸ்திரியா? 

 

போதையில் தடுமாறிய இந்திய கிரிக்கெட் அணி….  தோல்விக்கு காரணம் ரவிசாஸ்திரியா? 

உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 240 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 

உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 240 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 

இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

aa

இதனையடுத்து நேற்று நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து இன்று போட்டி மீண்டும் தொடங்கியது. இதில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் 74 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்திருந்தனர்.  240 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர்  ஒரே ரன்னில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினர். தோனி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 221 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் தோற்றுப்போனது. இதற்கு காரணம் இந்திய அணி வீரர்கள் போதையில் விளையாண்டதே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மழையால் போட்டி தடைப்பட்டதையடுத்து வீரர்கள் மது பானம் அருந்தியதாகவும், இன்று திடீரென போட்டியில் பங்கேற்றதால் சரியாக பங்கேற்க முடியவில்லை என்றும் ஒரு தகவல் கசிந்துள்ளது. 

இதுமட்டுமின்றி இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் ரவிசாஸ்திரியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரவி சாஸ்திரியுன் காலுக்கடியில் மதுபானம் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா  போராடி வெற்றிப்பெறும் என்ற சந்தோஷத்திலிருந்த  வீரர்கள் இந்த திடீர் தோல்வியால் மிகுந்த கவலையில் மூழ்கியுள்ளனர்.