போதையில் அரசு பேருந்தை பயணிகளுடன் ஓட்டிச்சென்ற ஆசாமி: வலைவீசி தேடும் போலீசார்!

 

போதையில் அரசு பேருந்தை பயணிகளுடன் ஓட்டிச்சென்ற ஆசாமி: வலைவீசி தேடும் போலீசார்!

காராம்கோட் பகுதிக்கு செல்லும் பேருந்தும் அங்கு நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 15 பயணிகள் அமர்ந்திருந்தனர். 

தெலங்கானா மாநிலம் தன்டூர் பேருந்து நிலையத்தில் கடைசி பேருந்து இயக்கத்துக்காகப் பயணிகள் காத்திருந்தனர். அங்கு பல பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. அப்போது காராம்கோட் பகுதிக்கு செல்லும் பேருந்தும் அங்கு நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 15 பயணிகள் அமர்ந்திருந்தனர். 

ttn

அப்போது குடிபோதையில் ஏறிய ஒருவர் அந்த பேருந்தை இயக்கினார். பேருந்து கட்டுப்பாடின்றி சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். நடத்துநர் இல்லாமல் பேருந்து  இயக்கியதால் பயணிகள் சந்தேகமடைந்து அந்த போதை ஆசாமியிடம் வண்டியை நிறுத்துமாறு கூறினர். பயணிகள் கூச்சலிட்டதால் அந்த ஆசாமி பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். 

ttn

இந்நிலையில்,15 பயணிகளின் உயிருடன் விளையாடிய அந்த போதை ஆசாமியை போலீசார் வலைவீசி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.