‘போதைப் பொருட்கள் வாழ்க்கையையே சீரழித்துவிடும்’ ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ள வீடியோ!

 

‘போதைப் பொருட்கள் வாழ்க்கையையே சீரழித்துவிடும்’ ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ள வீடியோ!

இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஏ.ஆர்.ரகுமார். இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழன். இசை மட்டுமே தம் வாழ்வாகக் கொண்டிருக்கும் ரஹ்மான், சமூக அக்கறை மிக்கவர். தமிழ்நாடு காவல் துறையுடன் சேர்ந்து இவர் உருவாக்கியிருக்கும் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்சமயம் இளம் தலைமுறையினருக்கு மிகவும் அவசியமாகச் சொல்ல வேண்டிய ‘போதையைத் தவிர்’ எனும் முக்கியமான செய்தியைச் சொல்கிறது.

“போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய நாள். இன்றைய நிலையில் நம் எல்லோருக்கும் விழிப்புணர்வு அவசியம். இந்த கோவிட்-19 வைரஸ் தாக்குதலிலிருந்து விரைவில் மீண்டுவிடலாம். ஆனால், போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்டால் மீள்வது சிரமம்.

போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை. தீய எண்ணங்களையும், கெட்ட நடத்தைகளையும் உருவாக்கும். பலர் வாழ்க்கை அழிந்துவிடும். கொடூரக் குற்றங்கள், வன்கொடுமை, சிறுவர்களின் வாழ்க்கைச் சீரழிவு போன்ற பல்வேறு தீய செயல்கள் போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள். எனவே, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம், தடுப்போம். இளைய தலைமுறையைக் காப்பாற்றுவோம் என ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்வோம்” என்று அந்த வீடியோவில் இளைஞர்களுக்கான செய்தியாகக் கூறியுள்ளார்.