போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகை கைது!

 

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகை கைது!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில்   மலையாள நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில்   மலையாள நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருபவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் 22 வயது நடிகை அஸ்வதி பாபு . இவர் கொச்சியில் உள்ள பாலச்சுவடு என்ற இடத்திலிருக்கும் கோல்டன் ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

aswathy

இந்நிலையில் இவரது வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக திற்காக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து நேற்று அவரது வீட்டுக்குச் சென்று போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 58 கிராம் எடையுள்ள எம்டிஎம்ஏ என்ற போதைப்பொருள் சிக்கியது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் என்பதும் தெரிய வந்துள்ளது. விசாரணையில் நடிகை அஸ்வதி போதைப்பொருளை பெங்களூரிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து நடிகை அஸ்வதி பாபுவை போலீசார் கைது செய்தனர். 

இதில் அவருக்கு உதவியாக இருந்த அவரது டிரைவரையும்  போலீசார் கைது செய்தனர்.போதைப்பொருள் வழக்கில் நடிகை ஒருவர் சிக்கியிருப்பது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.