போதைக்காக அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்தை குடித்த இளைஞர்கள் : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

 

போதைக்காக அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்தை குடித்த இளைஞர்கள் : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

உடல்நலம்  பாதிக்கபட்டு இவர்கள் தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பெரம்பலூர் நகர் சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஸ்(28), திருவள்ளுவர் நகரைச்சேர்ந்த ரமேஷ்( 34) மற்றும் திருநகரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா(24) ஆகிய போதைக்கு அடிமையானவர்கள். ஆனால்  ஊரடங்கு காரணமாக அவர்களுக்கு எங்கும் மதுபானம் கிடைக்கவில்லை. 

tt

இந்நிலையில், இவர்கள் மூவரும்  அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் SURGICAL SPIRIT எனும் மருந்தை போதைக்காக குடித்துள்னர். இதனால் உடல்நலம்  பாதிக்கபட்டு இவர்கள் தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

tt

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.