போதும்பா விட்ருங்க…. பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்த கஸ்தூரி!

 

போதும்பா விட்ருங்க…. பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்த கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

சென்னை: நடிகை கஸ்தூரி தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக நடிகை ரேஷ்மா, மோகன் வைத்தியா, சரவணன், மதுமீதா உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்வில் நடந்த சோக சம்பவங்கள் குறித்து அழுது கொண்டே போடியார்களிடம் பகிர்ந்து கொண்டனர். 

இந்த நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘போதும்பா விட்ருங்கப்பா… இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க… இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை… இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்க’ என்று குறிப்பிட்டுள்ளார். 

kasthuri

அதைத்தொடர்ந்து, ‘இதே சேனல்’ல  “கதையல்ல.. னு” சொல்லி ஒரு நிகழ்ச்சி…. வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா  அழவைப்பாங்க…  அதுல ஆரமிச்சது… எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக். எங்க பிளாட்ஸ் ல எல்லா வீட்டுலயும்  குழந்தைகளாம் பாக்குறாங்க…. குழந்தைங்க பாக்குற நிகழ்ச்சியா இது?  Parents, be responsible’ என்றும் பதிவிட்டுள்ளார். 

kasthuri