போட்டித் தேர்வுகளில் நெகட்டிவ் மார்க் கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

போட்டித் தேர்வுகளில் நெகட்டிவ் மார்க் கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போட்டித் தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை: போட்டித் தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சிபெறாத நெல்சன் என்ற மாணவர், மறு மதிப்பீடு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், பிரதான தேர்வில் 50 மதிப்பெண் எடுக்க வேண்டிய நிலையில், 47 மட்டுமே எடுத்ததால் அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தனது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர் நெல்சனை அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கவும், விடைத் தாளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். அதில், மாணவருக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த வழக்கானது நீதிபதி மகாதேவன் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட தவறான விடைகளுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறை பின்பற்றப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்று கொண்ட நீதிபதி, மனுதாரர் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சிபிஎஸ்சி மற்றும் பிற போட்டி தேர்வுகளில் தவறான விடைகளுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.