போக்குவரத்து விதி மீறல்: மடக்கி பிடிக்க தேவையில்லை, வீட்டிற்கே அபராத சீட்டு வரும்; எப்படி தெரியுமா?

 

போக்குவரத்து விதி மீறல்: மடக்கி பிடிக்க தேவையில்லை, வீட்டிற்கே அபராத சீட்டு வரும்; எப்படி தெரியுமா?

விதிகளை மீறி வாகனம் ஓட்டிச் செல்லும் நபர்களின் முகவரிக்கே சம்மனும், அபராத ரசீதும் அனுப்பும் திட்டம் சென்னை முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாகச் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிச் செல்லும் நபர்களின் முகவரிக்கே சம்மனும், அபராத ரசீதும் அனுப்பும் திட்டம் சென்னை முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாகச் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை புரசைவாக்கம் பகுதிகளில் ஆர்.சி.சி. திவா அறக்கட்டளை உதவியுடன் அமைக்கப்பட்ட 384 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தைத் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘பெரும்பாலான முக்கிய சாலைகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து விதிகளை மீறி வாகன ஓட்டிகள் சென்றால், ஆட்டோமெடிக் நம்பர் ரெகக்னிசன் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகன எண் தெளிவாக குறிப்பிட்டுத் தரும் தொழில்நுட்பம் என்பதால், விதிகளை மீறி சாலையில் செல்வோரை ஓடிச் சென்று மடக்கிப் பிடிக்கத் தேவையில்லை. மாறாக பதிவெண்ணில் உள்ள உரிமையாளரின் முகவரிக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அபராத ரசீதும் அனுப்பப்படும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக’ தெரிவித்தார்.

முன்னதாக வணிக நிறுவனங்கள், குடியிருப்புக்கள், சாலைகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்கச் சென்னை காவல்துறை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.