போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் மட்டும் இத்தனை லட்சம் வழக்குகளா?

 

போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் மட்டும் இத்தனை  லட்சம் வழக்குகளா?

புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் தமிழகத்தில் அமலுக்கு வராத நிலையில் இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை: சென்னையில் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

traffic

சென்னையில் கடந்த 2 மாதத்தில் 28 லட்சம் போக்குவரத்துக்கு விதிமீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குறிப்பாகப்  போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்கத் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி சுமார்  8 ஆயிரத்து 300 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

traffic

சென்னை அண்ணாநகரில்  கடந்த ஜூலை மாதம் பொருத்தப்பட்ட 58 நவீன கேமராக்கள்  மூலம், அண்ணா நகரில் மட்டும் சுமார் 63 ஆயிரம் வழக்குகள்  பதியப்பட்டுள்ளதாகச் சென்னை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் தமிழகத்தில் அமலுக்கு வராத நிலையில் இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.